
மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டில் தயாராகும் மொபைல் போன்களுக்கு அடிப்படை கலால் வரியில் 10 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் விலை குறைகிறது. அதேவேளை, இறக்குமதி செய்யப்படும் மொபைல்போன்களுக்கு வரி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2012-2013 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களான மொபைல், டேப்லட்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை கலால் வரியில் 10 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்கள் போன்ற மின்னணு சாதன பொருட்களுக்கு 2 சதவிகிதம் வரி அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலும் குறைந்த விலை மொபைல்போன்களை நோக்கியா, சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில்தான் தயாராகின்றன என்பதால் விலை குறையும். இதனால், அடித்தட்டு மக்கள் பயன்பெறுவர்.
0 comments:
Post a Comment