அனைவரது தேவையும் இன்று லேப்டாப் என்றாகிவிட்டது. நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட இவ்வுலகில் மின்னணு சாதனங்களின் அவசியமும் அதிகரித்து கொண்டு தான் போகிறது. சமீபத்தில் தோஷிபா நிறுவனம் கோஸ்மியோ எக்ஸ்-870 என்ற புதிய லேப்டாப் ஒன்றை உருவாக்கி உள்ளது.
இந்த லேப்டாப் எந்த தகவல்களையும் பளிச்சென்று காட்டும் 17.3 இஞ்ச் திரை
கொண்டது. 3டி காம்பாட்டிபில் வசதி உள்ள திரையை மட்டும் அல்லாது, உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமராவையும் இந்த லேப்டாப் வழங்கும். 3டி தொழில் நுட்பம் கொண்ட விஷயங்களை பார்க்க இதில் 3டி கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதை இந்த லேப்டாப்பில் உள்ள சிறப்பு அம்சம் என்று தான் சொல்ல வேண்டும்.என்விஐடிஐஏ கிராஃபிக்ஸ் பிராசஸரை கொண்டிருக்கும் இந்த லேப்டாப் டிவிடி சூப்பர் மல்டி ட்ரைவ் வசதியினையும் வழங்கும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயன்பாடுகளை வழங்கும் தோஷிபா கோஸ்மியோ எக்ஸ்-870 டேப்லட் கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

0 comments:
Post a Comment